நாடகம்

சென்னையில் மார்ச் மாதம் நடந்த ‘எடிசன்’ விருது நிகழ்ச்சியில் ‘ஓ பட்டர்ஃப்லை’ சிங்கப்பூர் நாடகத் தொடர், சிறந்த அனைத்துலகத் தமிழ் நாடகத் தொடருக்கான விருதை வென்றது.
ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமையன்று காலாங் சமூக மன்றத்தில், காலாங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் (ஐஏஈசி) ஏற்பாட்டில் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது நவரசத் திருவிழா 2024.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஞாயிறு (ஏப்ரல் 14) காலை 10 முதல் 11.30 மணி வரை மீனாட்சி எனும் பரதநாட்டிய நாடகம் அரங்கேறியது.
மாணவர்களுக்கு தமிழ்மொழியின்பால் ஈடுபாட்டை வளர்க்கவும் இலக்கியம், வரலாறு, பண்பாடு முதலியவற்றை கலை, வணிகம், பொறியியல் துறைகளின் கண்ணோட்டத்தில் அறிந்துகொள்ளவும் ‘பார்வை 2024’ வழிவகுத்தது.
சிலப்பதிகாரக் காவியம் குறிப்பிடும் பூம்புகார் நகருக்கு, ‘சம்பாபதி’ என்ற பழைய பெயர் இருந்தது. காவியத்தின் இணை நாயகியான மாதவி, 11 வகையான கூத்து வகைகளில் தேர்ச்சி அடைந்தவர்.